45. பெரியோர் சொற்படி நடந்தவர்

தந்தைதாய் வாக்ய பரிபாலனம் செய்தவன்
     தசரத குமாரராமன்
  தமையன்அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள்
     தருமனுக்கு இளைய நால்வர்
சிந்தையில் உணர்ந்து குருவாக்ய பரிபாலனம்
     செய்தவன் அரிச்சந்திரன்
  தேகிஎன்றோர்க்கு இல்லை எனா வாக்யபாலனம்
     செய்தவன் தான கன்னன்
நிந்தை தவிர் வாக்யபரிபாலனம் செய்தவன்
     நீள்பலம் மிகுந்த அனுமான்
  நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம்
     நிலத்தினில் நளாயினிசெய்தாள்
மந்தைவழி கோயில் குளமும்குலவு தும்பிமுகன்
     மகிழ்தர உகந்ததுணைவா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை