46. முயற்சியின் மிக்கது ஊழ்

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு
     மட்டன்றி அதிகம்ஆமோ?
  வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
     வண்ணப் பருந்துஆகுமோ?
கங்கா சலம்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்
     காய்நல்ல சுரைஆகுமோ
  கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்
     காணுமோ நால்நாழிதான்
ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே
     அடையாமல் நீங்கிவிடுமோ?
  ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்
     அமைத்தபடி அன்றிவருமோ.?
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு
     வந்ததுயர் தீர்த்தமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை