49. பயன்தரும்

பருவத்திலே பெற்ற சேயும், புரட்டாசி
     பாதிசம்பா நடுகையும்
  பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே
     பயிர்கொண்டு வருகரும்பும்
கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்
     கடன்இட்டு வைத்தமுதலும்
  காலம்அது நேரில் தனக்கு உறுதியாகமுன்
     கற்று உணர்ந்திடுகல்வியும்
விருதரசரைக் கண்டு பழகிய சிநேகமும்
     விவேகிகட்கு உபகாரமும்
  வீண் அல்ல இவையெலாம் கைப்பலன், தாகஅபி
     விர்த்தியாய் வரும்என்பர்காண்
மருஉலாவியநீப மாலையும் தண் தரள
     மாலையும் புனை மார்பனே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை