5. வேளாளர்
இயல்பு
நல்ல தேவாலயம்
பூசனை நடப்பதும்,
நாள்தோறும் மழை பொழிவதும்,
நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும்,
நவில்வேத வேதியர் எலாம்
சொல்அரிய யாக ஆதி கருமங்கள் செய்வதும்,
தொல்புவி செழிக்கும்நலமும்,
சுப சோபனங்களும், கொற்றவர்கள் செங்கோல்
துலங்கு மனுநெறி முறைமையும்,
வெல்அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
விற்பனையும், அதிக புகழும்,
மிக்க அதிகாரமும், தொழிலாளர் சீவனமும்,
வீர ரண சூரர்வலியும்,
வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
வாழ்வினால் விளைவ அன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|