57. கலிகாலக்
கொடுமை
தாய்புத்தி சொன்னால்
மறுத்திடும் காலம்,உயர்
தந்தையைச் சீறுகாலம்
சற்குருவை நிந்தை செய்காலம்,மெய்க் கடவுளைச்
சற்றும் எண்ணாதகாலம்
பேய்தெய்வம் என்று உபசரித்திடும்காலம்
புரட்டருக்கு ஏற்றகாலம்
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்,நல்
பெரியர்சொல் கேளாதகாலம்
தேய்வுடன் பெரியவன் சிறுமைஉறு காலம்,மிகு
சிறியவன் பெருகுகாலம்
செருவில்விட்டு ஓடினார் வரிசைபெறு காலம்வசை
செப்புவோர்க்கு உதவுகாலம்
வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
வாய்த்தகலி காலம்ஐயா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|