58. அவரவர்க்கு உரியவை

கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
     காணவைப் போன்பிதாவாம்!
  கற்று உணர்ந்தேதனது புகழால் பிதாவைப்ர
     காசம்செய்வோன் புத்திரன்!
செல்வமிகு கணவனே தெய்வம்என்று அனுதினம்
     சிந்தைசெய்பவள் மனைவியாம்!
  சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மைமொழி
     செப்பும் அவனே சோதரன்!
தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந்து உறுதிமொழி
     சொல்லும் அவனேகுரவன்ஆம்
  சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
     துய்யனே இனியசீடன்!
வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரியுடன்குறவர்
     வஞ்சியை மணந்தகணவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை