59. சிறுமையில் பெருமை

சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது
     திருமுடியின் மேல்இருக்கும்!
  திகழ்சிப்பி உடலில் சனித்தமுத்து அரசரது
     தேகத்தின் மேல்இருக்கும்!
போற்றிஇடு பூச்சியின் வாயின்நூல் பட்டுஎன்று
     பூசைக்கு நேசம்ஆகும்!
  புகல்அரிய வண்டுஎச்சில் ஆனதேன் தேவர்கோன்
     புனிதஅபிடேகம்ஆகும்!
சாற்றிய புலாலொடு பிறந்தகோரோசனை
     சவாதுபுழுகு அனைவர்க்கும்ஆம்!
  சாதிஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள்
     சபையின்மேல் வட்டம் அன்றோ?
மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல்குளிர
     வைத்த மெய்ஞ்ஞான முதலே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை