6. பிதாக்கள்
தவமது செய்தேபெற்று
எடுத்தவன் முதல்பிதா,
தனைவளர்த்தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
சார்ந்த சற்குரு ஒருபிதா,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒருபிதா, நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல்என்று உற்றதுயர் தீர்த்துளோன் ஒருபிதா,
அன்புள முனோன் ஒருபிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
கலிதவிர்த்தவன் ஒருபிதா,
காசினியில் இவரை நித்தம்பிதா என்றுஉளம்
கருதுவது நீதியாகும்
மவுலிதனில் மதிஅரவு புனைவிமலர் உதவுசிறு
மதலைஎன வருகுருபரா!
மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|