60. செய்யத் தகாதவை

தான் ஆசரித்துவரு தெய்வம்இது என்றுபொய்ச்
     சத்தியம் செயின்விடாது
  தன்வீட்டில் ஏற்றிய விளக்குஎன்று முத்தம்
     தனைக் கொடுத்தால்அதுசுடும்!
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதுஎன்று
     அடாது செய்யின் கெடுதியாம்
  ஆனைதான் மெத்தப் பழக்கம் ஆனாலும்செய்
     யாதுசெய்தால் கொன்றிடும்
தீனானது இனிதென்று மீதூண் விரும்பினால்
     தேக பீடைகளே தரும்
  செகராசர்சனு என ஏலாத காரியம்
     செய்தால் மனம்பொறார்காண்
வான்நாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்
     வந்து அவதரித்தமுதலே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை