61. நடுவு நிலைமை

வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள்
     வரும்என்றும் நேசர்என்றும்
  வன்பகைஞரென்று மயலோர் என்றும் மிக்கதன
     வான்என்றும் ஏழைஎன்றும்
இந்த வகையைக்குறித்து ஒருபட்சபாதம் ஓர்
     எள்அளவு உரைத்திடாமல்
  எண்ண முடனேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
     ஏற்கச்,ச பாசமதம்ஆம்
முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல்
     மொழிந்திடின் தர்மம்அதுகாண்
  முனைவீமன் உடல்பாதி மிருகம் தனக்குஎன்று
     முன்தருமர் சொன்னதுஅலவோ?
மைந்தன்என அன்றுஉமை முலைப்பால் கொடுத்திட
     வளர்ந்தஅருள் குழந்தைவடிவே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை