62. ஒருசார்பு சொல்லேல்

ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்து
     உரைப்போர் மலைக்குரங்குஆம்
  உயர்வெள் எருக்குடன் முளைத்துவிடும் அவர்இல்லம்
     உறையும்ஊர் பாழ்நத்தம்ஆம்
தாரணியில் இவர்கள்கிளை நெல்லிஇலை போல்உகும்
     சமானமா எழுபிறப்பும்
  சந்ததிஇலாது உழல்வர் அவர்முகத்தினில் மூத்த
     தையலே குடிஇருப்பாள்
பாரம்இவர் என்று புவிமங்கையும் நடுங்குவாள்
     பழித்ததுர்மரணம் ஆவார்
  பகர்முடிவிலே, ரவுர ஆதி நரகத்துஅனு
     பவிப்பர்,எப்போதும் என்பார்
வாரமுடன் அருணகிரி நாதருக்கு அனுபூதி
     வைத்துஎழுதி அருள் குருபரா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை