66. மானம்
விடாமை
கனபாரம் ஏறின் பிளந்திடுவது
அன்றியே
கல்தூண் வளைந்திடாது;
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே
கனசூரன் அமரில்முறியான்;
தினமும்ஓர் இடுக்கண்வந்து உற்றாலும் வேங்கைதோல்
சீவன் அளவில்கொடாது;
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
செப்பும்முறை தவறிடார்கள்;
வனம்ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
மயிரின் ஒன்றும்கொடாது;
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
மாதுநிறை தவறிநடவாள்;
மனதார உனதுஅடைக்கலம் என்ற கீரன்கு
வன்சிறை தவிர்த்தமுருகா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|