67. திருவருள் சிறப்பு

திருமகள் கடாட்சம் உண்டானால் எவர்க்கும்
     சிறப்புண்டு கனதைஉண்டு
  சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
     செல்லாத வார்த்தைசெல்லும்;
பொருளொடு துரும்பு மரியாதைஆம் செல்வமோ
     புகல்பெருக்கு ஆறுபோல் ஆம்;
  புவியின்முன் கண்டு மதியாதபேர் பழகினவர்
     போலவே நேசம்ஆவார்;
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
     பேரும்ப்ரதிட்டை உண்டாம்;
  பிரியமொடு பகையாளி கூடஉற வாகுவான்
     பேச்சினில் பிழைவராது
வரும்என நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
     வல்லமைகள் மிகவும்உண்டாம்;
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை