69. காலம் அறிதல்
காகம் பகல்காலம்
வென்றிடும் கூகையைக்
கனகமுடி அரசர்தாமும்
கருதுசயகாலம் அது கண்டுஅந்த வேளையில்
காரியம் முடித்துவிடுவார்
மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
மேன்மேலும் மாரிபொழியும்
மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
மிடியாளருக்கு உதவுவார்;
நாகரிகம் உறுகுயில் வசந்த காலத்திலே
நலம்என்று உகந்துகூவும்;
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
நாளையில் முடிப்பர்கண்டாய்;
வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
வாடிக்கை நிசம்அல்லவோ
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு?
மலைமேவு குமரேசனே!
|