7. ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை

சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
     சார்ந்து திருமாது இருக்கும்;
  சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
     தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களைஇருக்கும்;
  விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடந்தனில்
     மிக்கான தயைஇருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனில்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
  பகர்தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்உயிர் சிறக்கும் அன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை