7. ஒன்றை
ஒன்று பற்றியிருப்பவை
சத்தியம் தவறாது
இருப்பவர் இடத்தினில்
சார்ந்து திருமாது இருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களைஇருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடந்தனில்
மிக்கான தயைஇருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனில்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்உயிர் சிறக்கும் அன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|