77. வறுமையில் சிறுமை

வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;
     மனையாட்டி சற்றும் எண்ணாள்;
  வாக்கில் பிறக்கின்ற சொல்எலாம் பொல்லாத
     வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
     சிந்தையில் தைரியம்இல்லை;
  செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
     செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்
     உயிருடன் செத்தபிணமாம்;
  உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்று
     ஒருவர்ஒரு செய்திசொன்னால்
மறுவசனமும் சொலார்; துன்பினில் துன்பம்இது
     வந்துஅணுகிடாது அருளுவாய்
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை