77. வறுமையில்
சிறுமை
வறுமைதான் வந்திடின்
தாய்பழுது சொல்லுவாள்;
மனையாட்டி சற்றும் எண்ணாள்;
வாக்கில் பிறக்கின்ற சொல்எலாம் பொல்லாத
வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
சிந்தையில் தைரியம்இல்லை;
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்
உயிருடன் செத்தபிணமாம்;
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்று
ஒருவர்ஒரு செய்திசொன்னால்
மறுவசனமும் சொலார்; துன்பினில் துன்பம்இது
வந்துஅணுகிடாது அருளுவாய்
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|