78. தீச்
சார்பால் நன்மை இழப்பு
ஆனை தண்ணீரில்நிழல்
பார்த்திடத் தவளைசென்று
அங்கே கலக்கிஉலவும்;
ஆயிரம்பேர் கூடி வீடு கட்டிடில்ஏதம்
அறைகுறளும் உடனேவரும்;
ஏனைநல் பெரியோர்கள் போசனம் செயும்அளவில்
ஈக்கிடந்து இசைகேடதாம்;
இன்பமிகு பசுவிலே கன்றுசென்று ஊட்டுதற்கு
இனியகோன் அதுதடுக்கும்;
சேனைமன் னவர்என்ன கருமம் நியமிக்கினும்
சிறியோர்க ளால்குறைபடும்;
சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை
செய்ததுஒரு நரிஅல்லவோ?
மானையும் திகழ்தெய்வயானையும் தழுவுமணி
மார்பனே! அருளாளனே!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|