79. இடுக்கண்
உற்றும் பயன்படுபவை
ஆறு தண்ணீர்வற்றி
விட்டாலும் ஊற்றுநீர்
அமுதபானம் கொடுக்கும்;
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
அப்போதும் உதவிசெய்வன்;
கூறுமதி தேய்பிறையது ஆகவே குறையினும்
குவலயத்து இருள்சிதைக்கும்;
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
குருவிக்கு மேய்ச்சல்உண்டு
வீறுடன் உதாரிதான் மிடியானபோதினிலும்
மிக நாடிவருபவர்க்கு
வேறுவகை இல்லைஎன்று உரையாது இயன்றன
வியந்துஉளம் மகிழ்ந்துஉதவுவான்;
மாறுபடு சூரசங்கார, கம்பீரனே!
வடிவேல் அணிந்தமுருகா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|