83. நற்புலவர்
தீப்புலவர் செயல்
மிக்கான சோலையில்
குயில்சென்று மாங்கனி
விருப்பமொடு தேடிநாடும்;
மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
வேப்பங் கனிக்குநாடும்;
எக்காலும் வரிவண்டு பங்கேருகத்தினில்
இருக்கின்ற தேனைநாடும்;
எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்டு
இனம்துர்மலத்தை நாடும்;
தக்கோர் பொருட்சுவை நயங்கள் எங்கேஎன்று
தாம்பார்த்து உகந்துகொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கேஎன்று
தமிழில் ஆராய்வர்கண்டாய்
மைக்காவி விழிமாது தெய்வானையும் குறவர்
வள்ளியும் தழுவு தலைவா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|