85. தெய்வச் செயல்

சோடாய் மரத்தில் புறாஇண்டு இருந்திடத்
     துருவுகண்டே வேடுவன்
  தோலாமல் அவைஎய்யவேண்டும் என்றுஒருகணை
     தொடுத்துவில் வாங்கிநிற்க
ஊடாடி மேலே எழும்பிடின் அடிப்பதற்கு
     உலவு, ராசாளிகூட
  உயரப் பறந்துகொண்டே, திரிய அப்போது
     உதைத்தசிலை வேடன் அடியில்
சேடாக வல்விடம் தீண்டவே அவன்விழச்
     சிலையில் தொடுத்தவாளி
  சென்று இராசாளிமெய் தைத்துவிழ அவ்இரு
     சிறைப்புறா வாழ்ந்த அன்றோ?
வாடாமல் இவைஎலாம் சிவன்செயல்கள் அல்லாது
     மனச்செயலினாலும் வருமோ?
  மயில்ஏறி விளைாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை