92. வீணுக்கு உழைத்தல்

குயில்முட்டை தனதுஎன்று காக்கை அடைகாக்கும்
     குணம்போலும் ஈக்கள் எல்லாம்
  கூடியே தாம்உண்ண வேண்டும்எனறே தினம்
     கூடுஉய்த்த நறவுபோலும்;
பயில்சோரருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
     பாலன்என்று உள்கருதியே
  பாராட்டி முத்தம்இட்டு அன்பாய் வளர்த்திடும்
     பண்புஇலாப் புருடர்போலும்;
துயில்இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
     தொட்டுத் தெரித்திடாமல்
  தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
     சொந்தமானவர் வேறுகாண்;
வயிரமொடு சூரனைச் சங்காரமே செய்து
     வானவர்க்கு உதவுதலைவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை