92. வீணுக்கு
உழைத்தல்
குயில்முட்டை தனதுஎன்று
காக்கை அடைகாக்கும்
குணம்போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம்உண்ண வேண்டும்எனறே தினம்
கூடுஉய்த்த நறவுபோலும்;
பயில்சோரருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
பாலன்என்று உள்கருதியே
பாராட்டி முத்தம்இட்டு அன்பாய் வளர்த்திடும்
பண்புஇலாப் புருடர்போலும்;
துயில்இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
தொட்டுத் தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
சொந்தமானவர் வேறுகாண்;
வயிரமொடு சூரனைச் சங்காரமே செய்து
வானவர்க்கு உதவுதலைவா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|