94. கைவிடத் தகாதவர்

அன்னை சுற்றங்களையும், அற்றைநாள் முதலாக
     அடுத்துவரு பழையோரையும்,
  அடுபகைவரில்தப்பி வந்தஒரு வேந்தனையும்
     அன்பான பெரியோரையும்
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும்
     சார்ந்த மறையோர் தம்மையும்
  தருணம்இது என்றுநல் ஆபத்து வேளையில்
     சரணம் புகுந்தோரையும்
நன்நயமது ஆகமுன் உதவிசெய் தோரையும்
     நாளும் தனக்குஉறுதியாய்
  நத்து சேவகனையும் காப்பது அல்லாதுகை
     நழுவவிடல் ஆகாதுகாண்
மன்அயிலும் இனிய செஞ்சேவலும் செங்கைமலர்
     வைத்த சரவணபூபனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை