95. தகாத செயல்கள்

அண்டிவரும் உற்றார் பசித்துஅங்கு இருக்கவே
     அன்னியர்க்கு உதவுவோரும்;
  ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
     அற்பரை அடுத்தபேரும்;
கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
     கொண்டாடி மருவுவோரும்;
  கூறு சற்பாத்திரம் இருக்கமிகு தானமது
     குணம்இலார்க்கு ஈந்தபேரும்
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
     கைவிட்டு இருந்தபேரும்
  கரிவாலை விட்டு நரிவால்பற்றி நதிநீர்
     கடக்கின்ற மரியாதைகாண்
வண்டுஅடர் கடப்பமலர் மாலிகாபரணம்அணி
     மார்பனே! அருளாளனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை