96. நல்லோர் முறைமை

கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு
     குழந்தைபல பெறுதலாலும்
  குணமாகவே பிச்சை இட்டு உண்கையாலும்
     கொளும்பிதிர்க்கு இடுதலாலும்
தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும்
     தியாகம் கொடுத்தலாலும்
  சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
     சினத்தைத் தவிர்த்தலாலும்
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக
     நல்வார்த்தை சொல்லலாலும்
  நன்மையே தரும்அலால் தாழ்ச்சிகள் வராஇவை
     நல்லோர்கள் செயும்முறைமைகாண்
வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக்கீரன் முன்
     வந்துஉதவி செய்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை