97. அடைக்கலம் காத்தல்

அஞ்சல்என நாயின்உடல் தருமன் சுமந்துமுன்
     ஆற்றைக் கடத்துவித்தான்;
  அடைக்கலம் எனும்கயற்காக, நெடு மாலுடன்
     அருச்சுனன் சமர்புரிந்தான்;
தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி
     சரீரம் தனைக்கொடுத்தான்;
  தடமலைச் சிறகு அரிந்தவனைமுன் காக்கத்
     ததீசிமுதுகு என்புஅளித்தான்;
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர்
     எவருக்கும் ஆபத்திலே
  இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்து
     இரங்கி இரட்சிப்பர் அன்றோ?
வஞ்சகிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
     வளர்சூரன் உடல்கீண்டவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை