97. அடைக்கலம்
காத்தல்
அஞ்சல்என நாயின்உடல்
தருமன் சுமந்துமுன்
ஆற்றைக் கடத்துவித்தான்;
அடைக்கலம் எனும்கயற்காக, நெடு மாலுடன்
அருச்சுனன் சமர்புரிந்தான்;
தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி
சரீரம் தனைக்கொடுத்தான்;
தடமலைச் சிறகு அரிந்தவனைமுன் காக்கத்
ததீசிமுதுகு என்புஅளித்தான்;
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர்
எவருக்கும் ஆபத்திலே
இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்து
இரங்கி இரட்சிப்பர் அன்றோ?
வஞ்சகிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
வளர்சூரன் உடல்கீண்டவா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|