98. தக்கவையும் தகாதவையும்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசிஅதிகமாம்
     பருகுநீர் சேரின் என்ஆம்
  பவளத்தின் இடைமுத்தை வைத்திடில் சோபிதம்
     படிகமணி கோக்கின்என்ஆம்?
மேல்இனிய மன்னர்பால் யானை சேர்வதுகனதை
     மேடம்அது சேரின்என்ஆம்?
  மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
     வெண்கல் அழுத்தின்என்ஆம்?
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
     வளைகிழவர் சேரின்என்ஆம்?
  மருவு நல்லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
     வருகயவர் சேரின்என்ஆம்?
மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
     வள்ளிக்கு வாய்த்தகணவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை