99. பெரியோர்
இயல்பு
அன்னதானம் செய்தல்
பெரியோர்சொல் வழிநிற்றல்
ஆபத்தில் வந்தபேர்க்கு
அபயம் கொடுத்திடுதல் நல்இனம் சேர்ந்திடுதல்
ஆசிரியன் வழிநின்றவன்
சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
துணைஅடி அருச்சனைசெயல்
சோம்பல் இல்லாமல் உயிர்போகினும் வாய்மைமொழி
தொல்புவியில் நாட்டிஇடுதல்
மன்னரைச் சேர்ந்துஒழுகல் கற்புடைய மனைவியொடு
வைகினும் தாமரைஇலை
மருவுநீர் எனஉறுதல் இவைஎலாம் மேலவர்தம்
மாண்புஎன்று உரைப்பர் அன்றோ?
வன்னமயில் மேல்இவர்ந்து இவ்உலகை ஒருநொடியில்
வலமாக வந்தமுருகா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|