169

                    பிறவாநெறி - பேரூர்

(23)



முழங்குங் கடலுல கத்தாசை நீத்தமுக் கண்ணரசைத்
தொழுங்கை யுடைய தவப்பெரி யோர்களுந் தொல்லைமனத்
தழுங்குங் துயரகற் றும்பிற வாநெறி யாமிதென
வழங்குங் தலந்திருப் பேரூர் பயில்கொங்கு மண்டலமே.

               சுட்டதலை வெடியாதது - பேரூர்

(24)



அண்டர் பணிகின்ற தெய்வீக மேலைச் சிதம்பரத்திற்
புண்ட ரிகப்பதத் தாடும்பட் டீசர் புகழருளாற்
றுண்ட வுடலுயிர் மாண்டாரைக் கானலிற் சுட்டதலை
மண்டை வெடித்திட் டிடாப்பேரை சூழ்கொங்கு மண்டலமே.

                  அறுபத்துமூவர் - பேரூர்

(25)



பிறவா நெறியுநற் பேரூர்ப் பதியும் பிறப்பையொழித்
திறவா திருக்க மருந்துண்டு காண்பட்டி யார்பச்சையைத்
திருவா திரையிற் கனக சபையினிற் சேவித்திட
மருவா தறுபத்து மூவரும் வாழ்கொங்கு மண்டலமே.

                தொண்டாம்புத்தூர் - அகத்தியர்

(26)



அந்தரத் தோர்களும் பூலோகத் தாரு மதிசயித்துப்
புந்தி மகிழ்ந்து தொழவர மீயப் பொதியம்விட்டுச்
செந்திரு வாழ்கின்ற தொண்டாம்புத் தூரிற் செழுங்கிரிமேல்
வந்து குறுமுனி வைகி யதுங்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) தொண்டாம் புத்தூர். இது தொண்டாமுத்தூர் என
வழங்குகிறது. இது பேரூருக்குத் தென்மேற்கே ஐந்தாவது கல்லில்
உள்ளது. தொண்டாம்புத்தூருக்கு அருகே (சுமார் இரண்டு கல்
தொலைவில் பழுதுபட்ட பழமையான சிவாலயமொன்றுள்ளது.)