181

     அறச்சாலை வல்லியம்மன் அழகும் ஆற்றலும் மிகுந்தவள் அச்சுதன்
கொங்கு - திருமாலாற் காக்கப்பெறும் கொங்குநாடு; அச்சுதன் என்னும்
பெயருக்குரிய உபகாரிக்குரிய கொங்குநாடு.

     விசய நகர சக்கரவர்த்தியாய் விளங்கிய அச்சுததேவராயர் ஈண்டுக்
குறித்த அச்சுதன் எனில் இந்நூலாசிரியர் காலத்திற்கு அச்சுததேவராயர்
காலம் பிற்பட்டதாகத் தெரிதலின் அவரைக் கொள்ளுதற்கியலவில்லை.

         திருமலை நாதருக்குப் பரிசில் கொடுத்தது

(54)



திருவவி நாசிச் சிவனன்பு கொண்டுறு தென்னவன்மேற்
சொரிதமிழ் சொல்ல விகழ்ந்தா னெனநொந்து சோம்பிவர
விருது கவிதைத் திருமலை நாதருக்கு வீழ்ந்தபல
வரிசை கொடுத்த நிருபனு மாங்கொங்கு மண்டலமே.

       ஆணூர்ச்சர்க்கரை பாண்டியனால் பட்டம்பெற்றது

(55)



ஆணூர் புரக்கவும் விக்கிரமன் கோட்டை யழிக்கச் சொட்டை
வீணூர் புரக்கவும் உத்தம சோழனை வென்றனென்று
தாணூர் புரக்கின்ற சர்க்கரை பாண்டியன் றந்தபட்டம்
வாணோர் புரக்கக் கலிதடுத் தான்கொங்கு மண்டலமே.

        கரியான் சர்க்கரை வெண்ணை மலையில் வீரர்
     
               குறும்படக்கியது

(56)



கரியான்சொற் சர்க்கரை பெற்றது முத்தமக் காமிண்டன்றான்
குரியான சொட்டையில் வீரரை வென்று குறும்படக்கிச்
சரியாய் நிறுத்திடும் வெண்ணைநன் மாமலைச் சார்பினிற்றான்
வரிவாழை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே.