191

     (கு - ரை) உலகுடை மன்றாடி வெள்ளோட்டில் வாழ்ந்தவன் என்பது
கீழ்வரும் வெண்பாவால் விளங்குவதாகும்.

"வேணா வுடையார் வெள்ளோ டுலகுடையார்
 ஆணூருச் சர்க்கரைமன் றாடியார் - பேணுபுகழ்
 நாவேந்து பூந்துறைநண் ணாவுடையார் நால்வர்க்கும்
 மூவேந்தர் சூட்டும் முடி."

                    சோழர்கோன்

(75)



அம்புவிச் சோழநள் ளாறும் வருமயி ராவதமும்
பண்புறு மைந்திகழ் வில்வமுஞ் சேர்வனம் பைதலக்கோன்
செம்பியன் காணவிநாசியி லிங்கர்தன் சேர்வை பட்டம்
வம்புறு கண்டனாஞ் சோழர்கோன் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) பைதலக்கோன் - பாலைவேளாளரில் பைதல குலத்துத்
தலைவன். அவிநாசிக் கோவில் திருப்பணி செய்தவன். இவனைப் பற்றிய
கல்வெட்டுகள் அவிநாசிக் கோவிலில் உள்ளன.

                 கண்ணப்ப மன்றாடி

(76)



விண்ணப்ப மன்றாடி சொக்கர்மீ னாட்சியும் மீனவற்குக்
கண்ணப்ப மன்றாடி நீயென் றதுமதிக் காங்கயற்கு
எண்ணப்ப மன்றாடி கண்ணைதன் கோத்திர னேழுகடல்
மண்ணப்ப மன்றாடி கார்விடுத்தான் கொங்கு மண்டலமே.

              பெருங்கருணாலயச் செல்வி

(77)



புக்கொளி யீசர் பெருங்கரு ணாலயப் பொற்கொடியாள்
ஒக்கவும் நாற்பத்தெண் ணாயிரம் பேர்க ளொருவர்குறை
சிக்களம் பாலின் முளைவாரி வள்ளஞ் சிரசில்வைத்து
மக்களைக் காக்க வருகுமம் மேகொங்கு மண்டலமே.