10
|
நவமான
மாங்கனி நாரத மாமுனி நம்பர்செங்கைத்
தலமீது தந்து கொடுப்பக்கண் டேதற்க மாய்முருகன்
நிலமேழை யுமொரு கைநொடிப் போதில் நெடுமயில்மேல்
வலமாக வந்ததும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே |
(குறிப்பு)
கார்மேகக் கவிஞரின் முதற்சதகத்தில் "தீத்திகழ்மேனி"
என்னும் பாடலின் கருத்தை விளக்கும் பாடல்; வாய்த்த
பழனியென்றோனதுங் கொங்கு மண்டலமே" என வரும்
ஈண்டு, 'வைகாவூர் சூழ் கொங்கு மண்டலமே' எனக் கூறப்
பெற்றது.
(வெள்ளையானை
சாபம் தீர்ந்தது அவிநாசி)
11
|
இததறு
மாமுனி இந்திரற் கீய்ந்த வெழிற் றொங்கலை
துதைபட வாங்கி மிதித்திட் டுழக்கிய தோடத்தினால்
இதமுறு வன்புகழ் சேரவி நாசியில் சென்று வெள்ளை
மதகரி சாபம் தொலைத்தது வுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'வெனிற்றொங்கலை,' 'சாபம் துலைத்ததுவும்,' 'உளக்கிய"
(கொல்லியம்பாவை)
12
|
அரிக்க
யனுக்கரி தாயப் பொன்மேனி யறப்பள்ளியார்
கிரிச்சுர மீனைத் துண்டப் படவெட்டிக் கிழித்தறுத்து
பொரிச்சுண்ண வெண்ணிறப் பைந்தோன்றி நீருக்குள் போகவிட
வரிக்கயல் வாழ்கொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'அரப்பள்ளியார்' 'நீர்க்குள்,' 'பைந்தொடி'
(பேரூர்
பிறவாநெறி)
13
|
மீனெறி
வெண்டிறை சூழ்வா ருதிசுற்று மேதினியில்
தேனெறி பூங்கொன்றை சூடும்பட் டீசர் திருவருளால்
ஊனெறி யெண்பத்து நான்குநூ றாயிரத் தூடுபிற
வானெறி யென்பது பேரூர் பயில்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
"மீனேறி,
தேனேறி, ஊனேறி" 'ஊனென்றி'
(அறுந்த
மாங்கனி பொருந்தினது)
14
|
ஓங்குந்
திரைக்கடல் சூழுல கத்தினில் உண்மையதாய்
தேங்கு புகழ்கொண்ட மாம்பரை யூரினிற் சேர்வனத்தில் |
|