242

                  (வைகாவூர் பழனி)

10



 நவமான மாங்கனி நாரத மாமுனி நம்பர்செங்கைத்
தலமீது தந்து கொடுப்பக்கண் டேதற்க மாய்முருகன்
நிலமேழை யுமொரு கைநொடிப் போதில் நெடுமயில்மேல்
வலமாக வந்ததும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே

   (குறிப்பு) கார்மேகக் கவிஞரின் முதற்சதகத்தில் "தீத்திகழ்மேனி"
           என்னும் பாடலின் கருத்தை விளக்கும் பாடல்; வாய்த்த
           பழனியென்றோனதுங் கொங்கு மண்டலமே" என வரும்
           ஈண்டு, 'வைகாவூர் சூழ் கொங்கு மண்டலமே' எனக் கூறப்
           பெற்றது.

          (வெள்ளையானை சாபம் தீர்ந்தது அவிநாசி)

11



 இததறு மாமுனி இந்திரற் கீய்ந்த வெழிற் றொங்கலை
துதைபட வாங்கி மிதித்திட் டுழக்கிய தோடத்தினால்
இதமுறு வன்புகழ் சேரவி நாசியில் சென்று வெள்ளை
மதகரி சாபம் தொலைத்தது வுங்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'வெனிற்றொங்கலை,' 'சாபம் துலைத்ததுவும்,' 'உளக்கிய"

                   (கொல்லியம்பாவை)

12


அரிக்க யனுக்கரி தாயப் பொன்மேனி யறப்பள்ளியார்
கிரிச்சுர மீனைத் துண்டப் படவெட்டிக் கிழித்தறுத்து
பொரிச்சுண்ண வெண்ணிறப் பைந்தோன்றி நீருக்குள் போகவிட
வரிக்கயல் வாழ்கொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'அரப்பள்ளியார்' 'நீர்க்குள்,' 'பைந்தொடி'

                   (பேரூர் பிறவாநெறி)

13



 மீனெறி வெண்டிறை சூழ்வா ருதிசுற்று மேதினியில்
தேனெறி பூங்கொன்றை சூடும்பட் டீசர் திருவருளால்
ஊனெறி யெண்பத்து நான்குநூ றாயிரத் தூடுபிற
வானெறி யென்பது பேரூர் பயில்கொங்கு மண்டலமே

     (பி..ம்) "மீனேறி, தேனேறி, ஊனேறி" 'ஊனென்றி'

               (அறுந்த மாங்கனி பொருந்தினது)

14

 ஓங்குந் திரைக்கடல் சூழுல கத்தினில் உண்மையதாய்
தேங்கு புகழ்கொண்ட மாம்பரை யூரினிற் சேர்வனத்தில்