243

ஆங்கை வருத்தம் மனந்தனில் உற்ற ததுபுகலில்
மாங்கனி யற்றுப் பொருந்தின துங்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'உற்ற ததுபுகல'; 'மாம்பறை'; 'தேங்கும்புகழ்' 'ஒண்மையதாம்

      (தப்பித்தோடி வந்த மல்லரைச் சகாதேவன் கழுத்தறுத்தது)

15




திடங்கொண்ட வாட புரத்தினில் வீமன் மற் செட்டிகளை
இடங்கொண்ட செங்கையிற் கொள்கையி லேயிளைத்
                                  தோடொருவன்
தடங்கண்டு கேட்க சகாதேவ னுந்தண்ணித் தண்டுறையில்
மடங்கக் கழத்தை யறுத்தது வுங்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'கொல்கையிலே'; 'கழுத்தைத் திருப்பியதும்'; 'கேட்கிற'
           "கொள்கையிலேயிழைத்" வாடபுரம் - தாராபுரம்

                      (பூசகுலம்)

16.



ஆதண்ட மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய்
தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி
நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு
வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே

     (பி..ம்) "சோழன் அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி
            வெட்பு", சோழரகளங்கனுடன்',

                     (பூசகுலம்)

                     பூசைகுலம்

17.




யோசனை புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு
நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து
பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம்
பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு
                                    மண்டலமே

     (பி..ம்) 'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி',
           'கோன் செம்மல்'

                    (ஓதாளகுலம்)

18.



காண்டா வனமெரித் தீசனுக்காகக் கழுத்தரிந்து
பூண்டான் சிவமணி மாலையி னான்புகழ் ஆரைநல்லூர்
ஆண்டான் றன்ராசி ஓதாள கோத்திர ரனைவர்கலி
வேண்டா மெனப்புகழ்ந் தன்னமிட் டான்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'காண்டாபுரிமெரி', யாண்டான் றன்னாசி; ஆண்டான்
           றன்னாசி, 'வாண்டாமென'