|
ஆங்கை
வருத்தம் மனந்தனில் உற்ற ததுபுகலில்
மாங்கனி யற்றுப் பொருந்தின துங்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'உற்ற ததுபுகல'; 'மாம்பறை'; 'தேங்கும்புகழ்' 'ஒண்மையதாம்
(தப்பித்தோடி
வந்த மல்லரைச் சகாதேவன் கழுத்தறுத்தது)
15
|
திடங்கொண்ட
வாட புரத்தினில் வீமன் மற் செட்டிகளை
இடங்கொண்ட செங்கையிற் கொள்கையி லேயிளைத்
தோடொருவன்
தடங்கண்டு கேட்க சகாதேவ னுந்தண்ணித் தண்டுறையில்
மடங்கக் கழத்தை யறுத்தது வுங்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'கொல்கையிலே'; 'கழுத்தைத் திருப்பியதும்'; 'கேட்கிற'
"கொள்கையிலேயிழைத்"
வாடபுரம் - தாராபுரம்
(பூசகுலம்)
16.
|
ஆதண்ட
மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய்
தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி
நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு
வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
"சோழன்
அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி
வெட்பு",
சோழரகளங்கனுடன்',
(பூசகுலம்)
பூசைகுலம்
17.
|
யோசனை
புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு
நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து
பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம்
பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு
மண்டலமே |
(பி..ம்)
'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி',
'கோன்
செம்மல்'
(ஓதாளகுலம்)
18.
|
காண்டா
வனமெரித் தீசனுக்காகக் கழுத்தரிந்து
பூண்டான் சிவமணி மாலையி னான்புகழ் ஆரைநல்லூர்
ஆண்டான் றன்ராசி ஓதாள கோத்திர ரனைவர்கலி
வேண்டா மெனப்புகழ்ந் தன்னமிட் டான்கொங்கு மண்டலமே |
(பி..ம்)
'காண்டாபுரிமெரி', யாண்டான் றன்னாசி; ஆண்டான்
றன்னாசி,
'வாண்டாமென'
|