245

                     (கணவாளகுலம்)

24.



முழுவார் வணிகற்கு நீலி பழிக்கு முதல்வனென்று
கொழுவால் கழுத்தை ஒடித்தவன் காணெள்ளுக் கோர் பணிப்பில்
கீழை கணவாள கோத்திர நல்லையன் கீர்த்தியிலே
வழவா நெருப்பினில் வீழ்வான் திருக்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'முளு, கொளு, வளு"; 'முதல்வனென்றே' 'எள்ளுக்கோர்
            மணியில்'; மூன்றாம்அடி 'கணவாள கோத்திரம் நல்லான்
            சிறுவன்றன் கந்தன்மைந்தன்" என்பது; "கிளைகணவாள"

                      (எண்ணகுலம்)

                    (எண்ண குலாதிபன்)

25.



விண்ணவர் தேவர் நரகர் வசுரன் விகுத்தமறப்
பண்ணவ ராமர் செய்போர் முடித்தோன்பணை மங்கைப்பதி
யெண்ண குலாதிப னல்லான் செல்லப்ப னிரவிமுன்னே
வண்ணவன் சேலையு மெண்ணெய்தந் தான்கொங்கு மண்டலமே

     (பி..ம்) நரகாசுரன்றன்; 'போர்முடித்தார் பதிஎண்ணை மங்கை'
            'கொல்லப் பிறவிமுன்னே,' 'வண்ணமுஞ்சேலை"

                     (ஒழுக்கர் குலம்)

26.



அழற்கண்ணர் தேவர் நரகா வசுரன்றே வாவமிர்தம்
முழக்கமும் வீரம் குலைந்ததென் றேநல் மூச்செறிந்து
ஒழுக்கர் குலாதிபன் வேலன் சிறுவன் உலகுதனில்
வழக்கமுந் தேவர்க் கன்னமிட் டான்கொங்கு மண்டலமே

     (பி..ம்) 'தேவாவமுர்தம்', 'வீரம்குலைந்துதென்றே', 'தேவர்கட்
            கன்னமிட்டாள்' 'தேவா வமுதமிட்டான்' தலைப்பு 'ஒளுக்கர்
           குலம்'

                      (எருமை குலம்)

27.



குறுமுனி வேள்விப் பகடென ராட்சதன் கோரமிக
உறுமிய பூமியிற் பாய்ந்திடுங் கொம்பை உதிரவெட்டி
எருமைதன் கோத்திரன் மருதா சலமுத் திரவலற்கு
வருமைத் துயர மிடர்தவித் தான்கொங்கு மண்டலமே

       (பி..ம்) 'குருமுனி வேளப்பகடென', 'பாய்ந்திடுங்கொம்பை'        'மதுராசலமுத்து', "எருமை குலேந்திரன்"