கொல்லக்குட வரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை - (நற்றிணை)
பெரும் பூட்பொறையன் போமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை - (குறுந்தொகை)
(க-ரை) தேவர் முதலிய மற்றெல்லோரும் ஆசை கொள்ளத் தக்க பூத்தேன் சொரிந்தள்ள கொல்லி மலையுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
(மேற்)
கொல்லி மலைத் தேன்சொரியுங் கொற்றவா
(கம்பர் தனிப்பாட்டு)
உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி னகவிலைக் காந்த ளலங் குகுவலப் பாய்ந்து பறவை யழைத்த பல்க ணிறாஅற் றேனுடைய நெடுவரை (நற்றிணை)
எறிபத்தர்