| தொடக்கம் | 
		
				| 21-30 வரை 
 | 
		
				|  | 
					
			
			|  | | 
   
    | படிமீ தறுபத்து மூவரிற் பேரும் படைத்ததற்கா 
        முடிமீது கீரையும் மாவடு வுங்கொண்டு முக்கணற்குக்
 கடிதேகும் போதிட ருற்றுக் கழுத்ததைக் கையிலுள்ள
 வடிவாள்கொண் டேயரி வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (21)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | செந்நெல் முதிர்ந்தது பொன்னாய் விளைந்திடச் 
        சிந்தைமகிழ்ந் தந்நெல் செலவிடல் போலப் புலவர்க்கு மாதுலர்க்குந்
 துன்னிய கூலிக்கும் வேண்டிய பேர்க்குநற் சுந்தரர்க்கும்
 மன்னர்க்கு நல்கிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (22)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர் 
        தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்
 பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்
 வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (23)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | களமார் கறைக்கண்டச் சொக்கேசர் நிற்கக் 
        கரணபரந் தளமான பாத முருக்கொடு நாப்பண் தளைத்திருப்ப
 வுளமா தவரொடு சங்கப் பலகையி லொக்கவைகும்
 வளமான பன்னிரு வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (24)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | உத்தம னாமவ் வழுதியைச் சோழ னுயிர்கவர்ந்தே 
        இத்தலங் காக்கு மவனிறந் தேவிட விந்துகுலப்
 புத்திர னாண்டிட வேளாளர் பொன்முடி நெல்முடியை
 வைத்தர சாட்சி கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (25)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | நளனைப் புகழ்கின்ற வெண்பாவைப் பாடிநன் 
        னாட்கவிதை களகத்தில் மிக்க புகழேந்தி யாங்கவி ராசன் றன்னைத்
 தளவப் பெருநகை மாதொடு தென்னவன் றான்மணஞ்செய்
 வளவற்குச் சீதன மீந்ததும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (26)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேனலர் கற்பக நாடனுஞ் சேரனுஞ் சோழனுஞ்சொல் 
        தானுறு மேகம் புவியி லெனும்படி தாமவணி
 மீனவன் மீனக் கொடிக்கே துணைகொண்டு மேற்குடியில்
 வானள வோச்சிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (27)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | முளைவாரி முன்னமெம் மாற்கமு திட்டும் 
        முழங்கைவரைத் துளைவாயி லிட்டும் சுடுசோறு சூலி முதுகிலிட்டும்
 விளைவாஞ் சிலந்தியை யாடையைக் கீறி வெளியிலிட்டும்
 வளமான கீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (28)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | பார்த்தொரு பாணன் பிணமுஞ் சுமந்து பறையனுயிர் 
        காத்திதற் குப்பின்பு நீலி பழியைத் தழுவிக்கங்கா
 கோத்திரத் தாரென்றே பேர்கொண்டு கம்பற்குக் கொத்துடனே
 மாத்தொழில் தான்செய்யும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (29)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் 
        பிள்ளைத்தமிழ் கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்
 தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்
 பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (30)
 |  | 
 |  | 
		
			|  |  |  |