| தொடக்கம் | 
		
				| 31-40 வரை 
 | 
		
				|  | 
					
			
			|  | | 
   
    | ஆளும் சிவனும் புறம்பாக வாங்கவ ராளன்பர்தம் 
        மூளுந் திறனுங் குறும்பாக வேயிவர் முன்புவந்தால்
 தாளுந்திண் டோளுந் துணிப்பே னெனவுந் தடங்கைவிடா
 வாளுந் தடியுங்கொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (31)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் 
        கண்டுசிவன் அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து
 படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை
 வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (32)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று 
        கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்
 பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச
 மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (33)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் 
        போக்கிக்கடல் கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்
 தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்
 வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (34)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | சதுரங்கங் கொண்டு தளகர்த்த ராகித் 
        தமையடுத்தோர்க் கெதிர்வந்த சத்ரு சயஞ்செய்து முக்கண் இறையவர்க்கு
 நிதியது கொண்டேயந் நீளடிக் கன்பாய் முனையடுவார்
 மதிகொண்ட காவியங் கொண்டதும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (35)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | துரிசற்ற முக்கட் சிவனடி யார்தமைத் தூடித்தபே 
        ருருவத்து நாவை யடியறுத் தோட்டி யுலகத்திலே
 பொருசத்தி யுள்ள புருடருக் குள்ளிவர் போர்ப்புகழால்
 வருசத்தி யானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (36)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று 
        பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே
 காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு
 மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (37)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும் 
        பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்
 கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற
 வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (38)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | காக்கு மரசன் மனைவிநற் பூவினைக் கான்முகர 
        மூக்கை யரிந்தரன் பாதத்தி லன்பினை முற்றுவித்த
 தேக்குங் கருணை வடிவால் மிகுந்த செருத்துணையாய்
 வாக்கின் பெருமைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (39)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் 
        செம்பொன்னினால் தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத
 லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே
 மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (40)
 |  | 
 |  | 
		
			|  |  |  |