செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த
துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து
சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே
வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே.
(45)
அணிகாரைக் காலம்மை சோணாடு விட்டுவந்
தங்கமேபாழ்
துணிவாய்க் கணவனோ டூடிக் கயிலை தொடரவெண்ணித்
தணிவா நடக்கும் பொழுதிலந் தாதி தனியிரட்டை
மணிமாலை கொண்டு புகழ்தரும் பாண்டியன் மண்டலமே.
(46)
நந்தா வடியவர்
கண்டேத்த வானக நாடுவிட்டே
இந்த்ரா திகள்வந் தேபோற்றி வேண்டிய தெய்தவின்பந்
தந்தாளுஞ் சொக்க ரறுபத்து நாலு தரந்தனியே
வந்தாடல் செய்து விளையாடும் பாண்டியன் மண்டலமே.
(47)
திருவாத வூரரெம்
மாணிக்க வாசகர் தென்னவன்முன்
வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்
நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க
ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே.
(48)
தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ்
செஞ்சடைமே
லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை
வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு
வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே.
(49)
கனமான மானையங் கங்கொண்டு காசிக்குப்
போகையிலே
தனமான வாசையிற் சென்றங்கு தங்கவங் கம்புனைந்து
புனமான செம்ம லிறக்கிடப் போற்றுநற் பூவணமா
வனமான காசி விளங்கிய பாண்டியன் மண்டலமே.