| தொடக்கம் | 
		
				| 61-70 வரை 
 | 
		
				|  | 
					
			
			|  | | 
   
    | அதிசய மெய்துறு சக்கர வாத்திக ளானவரு 
        முதிர்தமிழ் கொண்டு வரையாது நல்கு முதல்வள்ளலுட்
 டுதிகொள வோங்கு நளனுஞ் சகரனுந் தொல்லுலகில்
 மதிகுல மாறன் குலத்தவர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (61)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேவிக்கு மன்னவன் 
      காப்பானென் றேகித் திரும்பிவந்து மேவிக் கலந்த விரவினில் சோதிக்க வேந்தன் தட்டிப்
 பூவிற் பொலிகைவைத் தேகிடப் பூசுரன் போந்துதர
 மாவிற்கை பொற்கை தருமாறன் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (62)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | புரிசைப் புரத்தினிற் சேரனுஞ் சோழனும் 
        போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப்
 பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
 வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (63)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் 
        கோட்டுமுனி மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்
 செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை
 மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (64)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | பேறுதந் தாளு முமையவள் தேகப் பெருநலததைக் 
        கூறுஞ் சவுந்த்ர லகிரியென் றோர்தமிழ் கூறிமிக
 வீறிய நல்ல கவிராச பண்டிதர் மேன்மையொன்ற
 மாற னரசு புரிந்தாளும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (65)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் 
        காசிகண்ட மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்
 கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்
 சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (66)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | இணங்கி யுலகத்து மெண்ணியல் விண்ணோர் 
        எழின்மடவார் கணங்கொண்ட சாபந் தவிர்ந்தே விளங்குங் கனிமதுர
 குணங்கொண்ட சேது புராணத்தைப் பாடிக் குவலயத்தில்
 வணங்கும் நிரம்ப வழகியார் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (67)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தைந்நின்ற பாண மதவே ளெடுத்துச் சமர்புரிய 
        மொய்ந்நின்ற வண்டு பசுந்தே னருந்தி முகம்விரியச்
 செய்ந்நின்ற பூஞ்சோலை சூழுங் கழுகு செறிசயில
 மய்ந்நின்ற வானை முருகனும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (68)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | சேரர்க்குஞ் 
      சோழர்க்கும் மாமுடி மீது சிகாமணியாய்ப் பூரிக்கு மாந்தர்க ளெல்லோரும் வாரிப் புனைந்துகொள்ளப்
 பாரிக்குங் கொங்கை மடவா ரெடுத்துப் பணிந்தணைய
 வாரிக்கு முத்தம் விளைவான பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (69)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | சிந்திக்கும் பேறு பெறவே வருந்தியித் 
        தேசத்திலே தொந்திக்குஞ் சஞ்சீவி தீர்த்தத்தி லாடிச் சுரர்பணிய
 அந்திப் பிறையணி யெம்மான்வந் தாட்கொண் டருளவுமே
 வந்திக்கும் பாவ விமோசனம் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (70)
 |  | 
 |  | 
		
			|  |  |  |