| தொடக்கம் | 
		
				| 71-80 வரை 
 | 
		
				|  | 
					
			
			|  | | 
   
    | ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந் 
        துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்
 தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்
 வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (71)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | மீனவன் வேதியர் பங்கைத் தடுக்க விரைந்தநுமான் 
        றானுள நொந்து மனுவிறந் தானென்று தண்டமிழைக்
 கோனுள மெச்சக் கொடுத்துத்தம் பங்கினைக் கொண்டுமகிழ்
 வானர வீரன் மதுரையும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (72)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | சொல்லிய மங்கைக் கரசியார் கொங்கைத் 
        துணையழுந்திப் புல்கி மணஞ்செய்து நேரியன் போர்வென்று பூதியணி
 நெல்லையில் வாழ்கின்ற சீர்நெடு மாறர்தம் நேசம்வைத்து
 வல்லியங் காத்துப் புரந்தவர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (73)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | அரிணம் பெறும்விழித் தேன்மொழி யாளபி 
        ராமியம்மை தருணம் வரநலத் தண்டீசர் கண்ணொளி தான்சிறக்க
 வருணன் பரிவோ டிடியும் மழையும் தாய்வரவத்
 திருவரு ளைப்பூசை செய்தவர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (74)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேகம் செழித்திடு மென்றே தெளிந்து சிவமயமாய் 
        மேகம் நிறங்கொளும் போதங்கு மேவிடில் மீனுமுண்டாய்க்
 காகம் படர்ந்து கருத்து மதிசயங் காட்டுமலர்
 வாசம் பொருந்துபொற் றாமரை பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (75)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேனேறு மின்சொ லிராமா யணத்தில் திருவழுந்தூ 
        ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத்துவைத்த
 தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனென்னும்
 வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (76)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | திருந்திய சீவில்லி புத்தூரில் ஞானத் 
        திருவுருவாய்ப் பொருந்துசொக் கேச ரதிகார மாய்வைத்துப் பூசைசெய்தே
 யருந்தவ ராகித் தரும புரத்தி லருள்புரிய
 வருந்திரு ஞானசம் பந்தரும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (77)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் 
        தென்னவன்றன் கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்
 தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து
 மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (78)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | செய்கொண்ட பங்கயம் போலே முகமும் திருவிழியும் 
        கைகொண்ட வாழியுஞ் சங்கமு மேந்திக் கருடன்மிசை
 மெய்கொண்ட மேக நிறங்கொண்ட மாயனு மேவியசீ
 வைகுண்ட பூமியைக் காட்டிடும் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (79)
 |  | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 
   
    | தென்னாடு முத்துடைத் தென்னு மிதுவன்றிச் 
        சேரனுடை நன்னாடு கல்லென்னும் வல்லிரும் பாகுமுன் னாடென்றுதான்
 சொன்னா வலர்புகழ் சோழன்மு னேநின்று சொல்லவுயர்
 மன்னாளு நாடது வன்றோதென் பாண்டியன் மண்டலமே.
 | 
 
 (80)
 |  | 
 |  | 
		
			|  |  |  |