71-80 வரை
 

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்
துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்
தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்
வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே.




(71)
   

மீனவன் வேதியர் பங்கைத் தடுக்க விரைந்தநுமான்
றானுள நொந்து மனுவிறந் தானென்று தண்டமிழைக்
கோனுள மெச்சக் கொடுத்துத்தம் பங்கினைக் கொண்டுமகிழ்
வானர வீரன் மதுரையும் பாண்டியன் மண்டலமே.




(72)
   

சொல்லிய மங்கைக் கரசியார் கொங்கைத் துணையழுந்திப்
புல்கி மணஞ்செய்து நேரியன் போர்வென்று பூதியணி
நெல்லையில் வாழ்கின்ற சீர்நெடு மாறர்தம் நேசம்வைத்து
வல்லியங் காத்துப் புரந்தவர் பாண்டியன் மண்டலமே.




(73)
   

அரிணம் பெறும்விழித் தேன்மொழி யாளபி ராமியம்மை
தருணம் வரநலத் தண்டீசர் கண்ணொளி தான்சிறக்க
வருணன் பரிவோ டிடியும் மழையும் தாய்வரவத்
திருவரு ளைப்பூசை செய்தவர் பாண்டியன் மண்டலமே.




(74)
   

தேகம் செழித்திடு மென்றே தெளிந்து சிவமயமாய்
மேகம் நிறங்கொளும் போதங்கு மேவிடில் மீனுமுண்டாய்க்
காகம் படர்ந்து கருத்து மதிசயங் காட்டுமலர்
வாசம் பொருந்துபொற் றாமரை பாண்டியன் மண்டலமே.




(75)
   

தேனேறு மின்சொ லிராமா யணத்தில் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத்துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனென்னும்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(76)
   

திருந்திய சீவில்லி புத்தூரில் ஞானத் திருவுருவாய்ப்
பொருந்துசொக் கேச ரதிகார மாய்வைத்துப் பூசைசெய்தே
யருந்தவ ராகித் தரும புரத்தி லருள்புரிய
வருந்திரு ஞானசம் பந்தரும் பாண்டியன் மண்டலமே.




(77)
   

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்
கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்
தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து
மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே.




(78)
   

செய்கொண்ட பங்கயம் போலே முகமும் திருவிழியும்
கைகொண்ட வாழியுஞ் சங்கமு மேந்திக் கருடன்மிசை
மெய்கொண்ட மேக நிறங்கொண்ட மாயனு மேவியசீ
வைகுண்ட பூமியைக் காட்டிடும் பாண்டியன் மண்டலமே.




(79)
   

தென்னாடு முத்துடைத் தென்னு மிதுவன்றிச் சேரனுடை
நன்னாடு கல்லென்னும் வல்லிரும் பாகுமுன் னாடென்றுதான்
சொன்னா வலர்புகழ் சோழன்மு னேநின்று சொல்லவுயர்
மன்னாளு நாடது வன்றோதென் பாண்டியன் மண்டலமே.




(80)