கடைசியில் யாவருங் கண்டு தொழுஞ்சீர்க்
கணங்களவை
புடைசெய் கருவூரிற் றோன்றிய சித்தர் புகுந்தழைக்க
உடல்மகிழ்ந் தாமென்று சேர்த்துக் கொளவெனச்
சேர்த்துக்கொண்டு
மடமயி லோர்பங்க ரார்வது பாண்டியன் மண்டலமே.
(85)
பலர்புகழ் கம்ப ருமையுட னீயுமொப் பாயென்றது
முலவிய சம்பந்தர் மங்கைக் கரசியென் றோதியதும்
நிலவிய பாண்டியர்க் கன்றியிந் நீணில நேரியர்க்கும்
மலைபெறு சேரர்க்கு மில்லெனும் பாண்டியன் மண்டலமே.
வக்கை நகராளு மாட்கொண்டா னைந்தா மறையெனவே
யெக்கணுஞ் சொல்பா ரதஞ்சனி யூர்வில்லி யேந்திசையோன்
தக்க தமிழிசை யாற்பாடச் செய்தேயித் தாரணியில்
மிக்க பரிசு கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே.