யானைமுகன் வணக்கம் 9. | காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக் | | கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்டு ஆரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும் ஐங்கரத்தது ஒருகளிற்றுக்கு அன்பு செய்வாம். | 10. | தனித்தனியே திசையானைத் தறிக ளாகச் | | சயத்தம்பம் பலநாட்டி ஒருகூ டத்தே அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும் அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்கவென்றே. | (பொ-நி.) சயத்தம்பம் பல நாட்டி, கவித்து நிற்கும் கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க என்று, கட்டுண்டு, நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்; (எ-று.) (வி-ம்.) காரண காரியக்கட்டாவது அகப்பற்றும் புறப்பற்றும்; அவை உடல் மனைவி மக்கள்மேல் உண்டாவன. கட்டறுப்போர் - யோகியர். யோகம்-மன ஒருமைப்பாடு. தறி-கட்டுத்தறி. ஆரணம்- மறை. கூடம்-யானை கட்டுமிடம். தறி-தூண். சயத்தம்பம் - வெற்றித்தூண். வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகக் கல்தூண் நிறுவிவைப்பது. கூடம் - அண்டகோளகை கவிதை - குடை, குடைக்கு அண்டகோளகை உவமையாம் என்க. கலிப்பகைஞன் - துன்பத்தை ஒழிப்போனாகிய குலோத்துங்கன். அபயன புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது. (9, 10) |
|
|