தூண் உத்திர இயல்பு கூறியது

100.அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம்
      அரசர் மண்டலத் தரண றப்பறித்து
எறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண்டு
     எழுது தூணொடு உத்திர மியற்றியே.

     (பொ-நி.)  வாரணம்  பறித்து  எறிதரும்  கணைமரங்கள்  கொண்டு
தூணொடு  உத்திரம்  இயற்றி; (எ-று.)

     (வி-ம்.) பிரான் - தலைவன். வாரணம் - யானை. அரண்- காவற்காடு.
கணைமரம்-கோட்டை  வாயிற்கதவின்  குறுக்கே  இடும்  மரம்.  எழுதுதூண்
-பதித்த தூண்.                                                (4)