துலாம் பா இயல்பு கூறியது

101.கடித ழிந்துபோர் மிதிலை யிற்படும்
      கரிம ருப்பினைத் திரள்து லாமெனும்
படிப ரப்பிஅப் பரும யானையின்
     பழுஎ லும்பினில் பாஅ டுக்கியே

     (பொ-நி.) கரி மருப்பினைத் துலாம் எனும்படி பரப்பியானையின் பழு
எலும்பினில் பா அடுக்கி; (எ-று)

     (வி-ம்.) மிதிலை - மிதிலைநகரம். கரி-யானை. மருப்பு-தந்தம். துலாம்
-உத்திரத்தின்மேல் முக்கோண வடிவுடன்  நிறுத்திய  மரம்.  பா - கூரையில்
இருபக்கமும் பரப்பும் கைகள்.                                    (5)