நாசிகை இயல்பு கூறியது

102.மீளி மாவுகைத்து அபயன் முன்னொர்நாள்
      விருத ராசரைப் பொருது கொண்டபோர்
ஆளி வாரணங் கேழல் சீயமென்று
     அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே.

     (பொ-நி.) அபயன், உகைத்து, பொருது, கொண்ட  அவை  நிரைத்து
நாசிகை இருத்தி; (எ-று.)

     (வி-ம்.) மீளி  வலிமை:  மா-யானை. விருது-வெற்றிச் சின்னம். ஆளி
-யாளி. வாரணம்-யானை. கேழல்- பன்றி.  சீயம் - சிங்கம்.  இவை  எழுதிய
கொடிகள் என்க. நிரைத்து-வரிசையாக வைத்து. நாசிகை-கூடல்வாய்.     (6)