மேற்கூரை இயல்பு கூறியது 105. | துங்க பத்திரைச் செங் களத்திடைச் | | சோள சேகரன் வாளெ றிந்தபோர் வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வெளிஅ டங்கவே மிசைக விக்கவே | (பொ-நி.) சோளசேகரன், செங்களத்திடை, எறிந்த களிற்றின் படத்தினால் மிசை கவிக்க; (எ-று.) (வி-ம்.) செங்களம்-போர்க்களம், சோளன்-சோழன்-குலோத்துங்கன். கதம்-சினம். வெளி அடங்க-வெற்றிடமில்லாது மறையும்படி. படம்-முகபடாம். மிசை-கூரை. (7) |