வழிபாட்டியல்பு கூறியது 109. | சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் | | தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவுமொலி கடலொலிபோல் பரக்கு மாலோ. |
(பொ.நி.) வீரர் "வரம் தருக; தக்கதாக உறுப்பரிந்து தருதும்" என்று பரவும் ஒலி பரக்கும்; (எ-று.) (வி-ம்.) சலியாத-மனந்தளராத. தறுகண்-அஞ்சாமை. தருக-தருவாயாக. பலி-கொடுக்கின்ற கடன். உறுப்பு-அவயவம். பரவுதல்-துதித்தல். பரக்கும் -பரவும். (13) |