வழிபாட்டியல்பு கூறியது

109.சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
      தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
     பரவுமொலி கடலொலிபோல் பரக்கு மாலோ.

     (பொ.நி.) வீரர் "வரம் தருக; தக்கதாக உறுப்பரிந்து தருதும்" என்று
பரவும் ஒலி பரக்கும்; (எ-று.)

     (வி-ம்.) சலியாத-மனந்தளராத. தறுகண்-அஞ்சாமை. தருக-தருவாயாக.
பலி-கொடுக்கின்ற  கடன்.  உறுப்பு-அவயவம்.  பரவுதல்-துதித்தல்.  பரக்கும்
-பரவும்.                                                     (13)