ஆறுமுகன் வணக்கம்

11.பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய
     நிறம்படைத்த புயமும் கண்ணும் 
பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான்
   அடித்தலங்கள் பணிதல் செய்வாம்.
    
12.ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந்து
     ஒருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்  
ஈரிரண்டு படைத்துடைய இரவிகுலோத்
    தமனபயன் வாழ்க வென்றே.
    

    (பொ-நி) நிலைபெறவந்து,  கடலும்  திக்கும் படைத்துடைய அபயன
்வாழ்க என்று,  புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் உடையான்
அடித்தலங்கள்  பணிதல்  செய்வாம்; (எ-று.)

  
 (வி-ம்.)இரண்டு     பொன்வரை     தோற்கும்என     இயைக்க. இணைப்புயங்களுக்கு  இருவரை உவமை என்க.பொரு-ஒப்பு, புயம்-தோள்.
இரண்டு குலம்-தாய்தந்தையர் குலம். ஈரிரண்டுகடலும் திக்கும் என இயக்க.
இரவி-ஞாயிறு.  குலோத்தமன்;  குல+உத்தமன்.  தன்  மரபிற்  சிறந்தவன், மேலானவன். ஈண்டும் ஆட்சிப் பரப்பே குறிக்கப்பட்டது.         (11, 12)