பலியிட்ட தலை இயல்பு கூறியது

112.நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த
      நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ
     அணைதலும்அச் சிரம்அச்ச முறுத்து மாலோ.

     (பொ-நி.) ஆண்டலைப்புள்,  வைத்த  சிரத்தை  இனமென்றெண்ணி,
அணைந்து  பார்க்கும்;அச்சிரம்  அச்சுறுத்தும்; (எ-று.)

     
(வி-ம்.) பலிபீடம்-பலிக்கடன்  செலுத்தும் மேலிடம். குஞ்சி-மயிர்முடி.
சிரம் - தலை.  ஆண்டலைப்புள் - ஆண்டலை  என்னும்  பறவை.  அருகு
-தன்பக்கம். அணைதல் - சேர்தல்.                               (16)