பலிஇட்ட தலை இயல்பு கூறியது 118 | அரிந்ததலை உடனமர்ந்தே ஆடுகழை | | அலைகுருதிப் புனலின் மூழ்கி இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற நெடுந்தூண்டில் என்னத் தோன்றும். | (பொ-நி.) தலையுடன் ஆடு கழை காலன் இடுகின்ற தூண்டில் என்னத் தோன்றும்; (எ-று.) (வி-ம்.) அரிந்த-அறுத்த. அமர்ந்து-பொருந்தி. கழை-மூங்கில். காலன் - இயமன். குருதியாகிய தண்ணீரில் உடலாகிய மீனைப் பிடிக்க மூங்கிலாகிய தூண்டிலை இயமனாகிய தூண்டிற்காரன் இட்டதுபோன்று என்க. (22) |