தோற்றுவாய்      

121.உவையுவை உளஎன் றெண்ணி
    உரைப்ப தென்உரைக் கவந்த
அவை அவை மகிழ்ந்த மோடி
   அவயவம் விளம்பல் செய்வாம்,

     (பொ-நி.) உவை உவை உள என்று உரைப்பதென்; அவை அவை
மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்; (எ-று.)

     (வி-ம்.) உவை உவை உள என்று-காளிபக்கம் இன்னின்ன பொருள் இருக்கின்றன என்று, அவை அவை மகிழ்ந்த-அவ்வெல்லாப் பொருளையும்
ஏற்று மகிழ்ந்த, மோடி-காளி.                                   (1)